பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 5 January 2025

2025 திருவள்ளுவர் தினத்தில் அண்ணா விருது பெரும் எங்கள் அன்புக்குரிய எல். கணேசன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

  வெற்றிசெல்வன்       Sunday, 5 January 2025
1983 ஆண்டு ஆரம்ப மாதங்களில் தமிழ்நாட்டில் இலங்கை போராளிகளை இலங்கையிடம் ஒப்படைக்க எம்ஜிஆர் அரசு முழு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, அதை தடுக்க கலைஞரின் வழிகாட்டுதலின்படி திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் எல்கணேசன் அண்ணன் அவர்கள் பெரும் முயற்சிகளை டெல்லியில் மேற்கொண்டார். 
    இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதே நேரம் இலங்கையில் நடந்த வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் போது டெல்லியில் பிரம்மாண்ட ஊர்வலத்தையும் இலங்கை அரசாங்கத்துக்காக எதிராக நடத்தி இந்திய மக்களையும், மற்றும் வெளிநாட்டு தூதுவர்களையும் தமிழ்நாட்டு மக்களின் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலையை திரும்பிப் பார்க்கச் செய்தார். 
1983 ஆண்டு நெருக்கடியான நிலையில் இருந்த இலங்கை தமிழ் போராளிகளுக்கு, தனது ஆதரவான குரலை மட்டும் கொடுக்கவில்லை, போராளிகள் டெல்லியில் வந்து தங்கி லெபனானில் பயிற்சி பெற போவதற்கும், தனது டில்லி வீட்டை பாவிப்பதற்கும் அனுமதி கொடுத்த எல். கணேசன் அண்ணாவை மறக்க முடியாது. 

இன்று எல். கணேசன் அண்ணாவுக்கு தமிழ்நாடு அரசாங்கம் அண்ணா விருது அறிவித்திருப்பதற்கு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

1983 ஆண்டுகால முன்னாள் இலங்கை தமிழ் போராளிகளின் சார்பாக வாழ்த்துகிறோம்



logoblog

Thanks for reading 2025 திருவள்ளுவர் தினத்தில் அண்ணா விருது பெரும் எங்கள் அன்புக்குரிய எல். கணேசன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment