சுயநலம் கொண்ட புலம்பெயர் தமிழர்களில் பலர் தாங்கள் குடும்பத்தோடு சுற்றுலாவுக்காக ஈழ மண்ணிற்கு வந்து தங்கி சுக போகங்களை அனுபவித்து விட்டு
போவதற்காக கோடிக்கணக்கான பணத்தை கொட்டி செலவழித்து மாடமாளிகைகளை கட்டிஒரு காட்சி பொருளாக காட்டுவதோடு அடுத்த வருட விடுமுறை வரை அந்த வீட்டை பராமரிப்பது காவல் காப்பது போன்றவற்றிற்கு மாதாந்தம் அதற்காக ஊதியத்தையும் கொடுக்கின்றார்கள்.தாயகத்தில் தங்கள் உயிர்,உறவு,உடைமைகளை இழந்ததினால் தான் வெளிநாடு,சுகபோகம் போன்றவற்றை இலகுவாக பெற்றார்கள்..இந்த தாயக உறவுகள் உண்பதற்கு உணவோ,இருப்பதற்கு இடமோ இல்லாமல் அகதி முகாம்களில் மழை,வெள்ளம் போன்றவற்றை தாங்கிக்கொள்ள முடியாத சிறு குடிசைகளிலும் சொல்லணா துன்பத்தை அனுபவிப்பது இந்த வெளிநாட்டு சுகபோக வாசிகளுக்கு தெரியவில்லையா?
இதில் குறிப்பிட்ட கருத்துக்கள் என் கற்பனையில் உதிர்த்தவை அல்ல...நேரில் கண்ட சம்பவம்...எல்லை மீறி போனால் அகல பாதாளம் தான் இறைவன் கொடுக்கும் தண்டனையா இருக்கும் என்பதை மறந்து விடாதே மமதை கொண்ட மானிடா😈😈😈
No comments:
Post a Comment