#மாவை #சேனாதிராஜாவின் #பழைய #பக்கம்
திரு வெற்றி செல்வன் சுதுமலையை சேர்ந்தவர் அவர்கள் 1976ல் தமிழரசுக்கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் அந்தக்காலப்பகுதியில் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் பயின்ற நேரம் ஈழக் கனவில் 1982ம் ஆண்டு plote அமைப்பில் தன்னை இணைத்து கொண்டவர்.
Plote அமைப்பின் டெல்லி பொறுப்பாளராக செயற்பட்டவர் அதேவேளை ஈழ போரட்டம் பற்றி ஒவ்வொரு நாட்டின் தூதரகங்களை சென்று விளக்கம் அளிப்பதும் இவருடைய பணி
இந்த காலப்பகுதியில் அமிர்தலிங்கமும் மாவை சேனாதிராஜாவும் டெல்லியில் உள்ளதமிழ்நாடு Guest house ல் தங்கி இருந்தார்கள் அந்த காலத்தில் அமிர்தலிங்கத்தின் உதவியாளராக செயற்பட்டவர் மாவை சேனாதிராஜா .இதைவேளை டெல்லியில் இலங்கையை சேர்ந்த அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினகள் அனைவரும் அந்த விடுதியில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
ஒரு சமயம் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜெவர்தனா commonwealth மாநாட்டில் பங்கு பற்ற வந்த நேரம் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ோகேஸ்வரன் மற்றும். சாவகச்சேரி நவரத்தினம் எம்பி மாறின்அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு Guest house ல் இருந்து அரை மைல் தூரத்தில் இருந்த இலங்கை தூதுவர் இல்லத்தில் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஆவணத்தை விநியோகிக்க வெற்றி செல்வன் சென்ற பொழுது இலங்கை ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி செய்தாக பொய் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யபட்டார் வெற்றி செல்வன்.
வெற்றி செல்வன் சிறையில் இருந்து திரும்பிய பொழுது சிறை வாசலுக்கு மாலையேடு தனது சுய விளம்பரத்திற்கு வந்த மாவை மாலையை வெற்றி செல்வனுக்கு போட்டு தனக்கு சுயவிளம்பரத்தை தேடிவிட்டார்
மாலையும் மாலையுடன் வெற்றி செல்வன் சிறை வாசலில் படம் இணைக்க பட்டுள்ளது
No comments:
Post a Comment