1984 ஆண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆயுதம் இறக்குமதி செய்த விடயம் சம்பந்தமாக பலவித வதந்திகள் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஏன் உமா மகேஸ்வரன் கூட தான் செய்த தவறு தெரியக்கூடாது என்று 86ஆம் ஆண்டு இயக்கத் தோழர்கள் இடம் உண்மையை மறைத்து இந்திய அரசாங்கம் தான் ஆயுதங்களை பிடித்தது என்று பொய் கூறினார். பின்பு பின்தள மாநாட்டின்போது மன்னிப்பு கேட்டார்.
. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளை உறுப்பினர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த கதிரவேற்பிள்ளை சீனிவாசன் இயக்கத்திற்கு ஆயுதம் வாங்க 1984 ஆண்டு முயற்சிகள் செய்தார். அவருக்கு உதவி செய்ய மிக ரகசியமாக டெல்லியில் நானும்,சென்னையில் ரமேஷ் என்கிற நிலா நேசம் என்பவரும் (தற்போது கனடாவில் இருக்கிரார்) இந்த ஆயுதம் சம்பந்தமாக உமா மகேஸ்வரனுக்கு நேரடி தொடர்பாளராக நியமிக்கப் பட்டோம். சீனிவாசன் ஹொங்கொங் போய் ஏற்பாடுகள் செய்ய, சென்னையில் இருந்து டெல்லி வழியாக ரமேஷ் ஹொங்கொங் அனுப்பப் பட்டார். சில வேலைகளை முடித்துவிட்டு ரமேஷ் ஒரு வாரத்தில் திரும்பி விட்டார்.
சீனிவாசனுக்கு ஹாங்காங்கில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோது,ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தனது 10 வயது மகளை பணத்தை எடுத்து வர ஏற்பாடு செய்தார் இது தெரிந்து அங்கிருந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக. தற்போதைய தலைவர் சித்தார்த்தன் சீனிவாசனை கடுமையாக கண்டித்து வேறு வழியில் பணத்தை அனுப்பியுள்ளார்.சீனாவிலிருந்து வந்த ஆயுதங்களை இந்தியாவில் ஆந்திராவுக்கு போகும் பழைய பேப்பர்கள் என பதிவு செய்து அனுப்பி அந்தக் அந்தக் கொள்கலனை ஏற்றி வந்த கப்பல் சிங்கப்பூரிலிருந்து அந்த கொள்கலன் சென்னைக்குப் போகும் கப்பலில் மாற்றப்படவேண்டும் சீனிவாசன் சிங்கப்பூரில் வேலை செய்த தனக்குத் தெரிந்த பல இளைஞர்களை அழைத்துசீன கொள்கலனில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய சிங்கப்பூர் கொள்கலனில் மாற்றி மாற்றியபோது ஆயுதங்களோடு இருந்த சீனமொழி பத்திரிகைகளை அகற்றிவிட்டு சிங்கப்பூரில் இருந்த ஆங்கில பழைய பத்திரிகைகளை வாங்கி அடுக்கி ஆயுதங்களை மறைத்துள்ளார்.
தலைவர் உமா மகேஸ்வரனுக்கு எல்லா விபரங்களும் அனுப்பப்பட்டு உமா மகேஸ்வரனும் சென்னையில் அந்தக் கொள் கலனைவெளியில் எடுக்க ஆந்திராவைச் சேர்ந்த சென்னையில் தொழில்செய்யும் அண்ணாநகரில் இருந்த கன்டைனர் கிளியரன்ஸ் ஏஜென்ட் இடம் பத்தாயிரம் ரூபா கொடுத்து இந்த பழைய பேப்பர்கள் வருவதாகவும் ஆந்திராவில் உள்ள பேப்பர் மில்லில் செல்வதாகவும் கூறி ஏற்பாடு செய்துள்ளார். ஏஜென்ட் கஷ்டம் அதிகாரிகளுக்கு எல்லாம் காசு கொடுத்து திறக்காமல் வெளியில் கொண்டு வரக் கூடியவர். அந்த ஏஜன்ட் முதலில் போய் சாதாரணமாக கொள்கலனை திறந்துபார்த்துள்ளார். மறைவாக இருந்த ஆயுதங்களை பார்த்து விட்டார்.பயந்துபோய் கொள்கலனை மூடி விட்டு வந்தவர். உமாவிடம் சண்டை பிடித்துள்ளார். கூடுதல் காசு கேட்டுள்ளார்.
அந்த ஏஜென்ட் சரிகட்ட உமா மகேஸ்வரன் தனது சகோதரியின் கணவர் ராஜ் துறையையும், வாமத்தேவன் அனுப்பியுள்ளார். இதைக் கேள்விப்பட்டு சென்னையில் இருந்த சித்தாத்தன் அவர்களை திருப்பி
அழைத்துவிட்டு அந்தப் பொறுப்பை பரந்தன் ராஜன் இடம் கொடுக்கும் படி கூறியுள்ளார். ராஜன் காசு கூட குறைய பேசி கச்சிதமாக கண்டனரே எடுத்து விடுவார் என சித்தார்த்தன் கூறி இருக்கிறார் ஆனால் உமா மகேஸ்வரன் ஒரு காசு கூடமேலதிகமாக செலவழிக்காமல் வாமணலேயும், ராஜதுரை எடுப்பார்கள் என நம்பிக்கையாக கூறியுள்ளார். ஏஜென்ட் இடம் போன ராஜதுரை வாமணும் முதலில் ஏஜென்ட் மிரட்டியுள்ளார் கள். ஏஜென்ட் கூடுதல் பணத்துக்கு பிடிவாதமாக இருந்துள்ளார் . உடன்வாமன் கைத்துப்பாக்கியை எடுத்து ஏஜன்ட் இன் வாயில் வைத்து ரெண்டு நாளில் கண்டனர் எடுத்துத் தர வேண்டும் இல்லாவிட்டால் சுட்டு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
ஏஜென்ட் பயப்படவில்லை உடன் சுங்க இலாகா அதிகாரிகள் இடம் கன்டெய்னரில் ஆயுதங்கள் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஏஜென்ட் உமா மகேஸ்வரனை காட்டிக் கொடுக்கவில்லை. அக்காலக்கட்டங்களில் விடுதலை இயக்கங்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த பொலீஸ் ஐஜி மோகனதாஸ் அறிவித்துள்ளார்கள். கஸ்டம்ஸ் கூறியது ஆந்திராவிலுள்ள நக்சலைட்டுகள் அக்கு சீனாவில் இருந்து ஆயுதம் வந்துள்ளதா க. ஆனால் மோகனதாஸ் மோப்பம் பிடித்து ஆயுதம் வந்துள்ளதாக பத்திரிகைகளுக்கு செய்தியும் கொடுத்து உமா மகேஸ்வரனை நெருங்கிய சமயம், உமா உடனடியாக சென்னையிலிருந்து சித்தாத்தன் டெல்லிக்கு அனுப்பினார் நானும் சித்தார்த்தனும் போய் ஜி பார்த்தசாரதி அவர்களை பார்த்தோம் அவர் எங்களை ரொம்ப திட்டினார்.அவர் கேட்ட கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. உமா ஏன் இப்படி முட்டாளாக இருக்கிறார். மிக ரகசியமாக முடிக்கவேண்டிய வேலையை ஏஜென்ட் துப்பாக்கியை காட்டி மிரட்ட வேண்டுமா? அதோடு மோகனதாஸ் இயக்கங்களுக்கு எதிராக கடுமையாக இருப்பதாகவும் எம்ஜிஆர் கூடமோகனதாஸ்சிலவேளை கட்டுப்படுத்த முடியாது இருப்பதாகவும் கூறினார்.
.. இந்த விபரங்கள் பத்திரிகையில் வந்த படியால் இந்த ஆயுதங்களை எடுக்க மத்திய அரசால் உதவி செய்ய முடியாது என்று கூறினார் காரணம் பத்திரிகைகளும் இலங்கை உட்பட இலங்கைக்கு ஆதரவான நாடுகள் இந்தியாவின் மேல் எதிரான பிரச்சாரங்கள் செய்யக்கூடும்.அதோடு எந்த காரணம் கொண்டும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (பிளாட்)இந்த ஆயுதங்கள் வந்தன என்று யாரிடமும் கூற வேண்டாம் மறுத்து விடுங்கள். காரணம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான் என்று செய்தி பரவினால் தமிழ்நாடு பொலிஸார் கட்டாய நடவடிக்கை எடுப்பார்கள். இந்த அவ்வளவு தான் நடந்தது உண்மை எங்கள் இயக்கம் செய்த தவறால் தான் ஆயுதங்கள் பிடிபட்டனர்.
. பின்பு சென்னை வந்த சீனிவாசன் உமாமகேஸ்வரன் இடம் மிகவும் சண்டை பிடித்தார் தன் உயிரைப் பணயம் வைத்து கொண்டு வந்த ஆயுதங்களை கிளியர் பண்ண எடுக்க முடியாதா நீ எல்லாம் ஒரு தலைவன் உனக்கு ஒரு இயக்கம் என முகத்துக்கு நேராக கேட்டுவிட்டுஇயக்கத்தை விட்டு விலகிப் போய்விட்டார்.
No comments:
Post a Comment