பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 26 June 2025

தொடர்ந்து தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு பதவிக்காகவும் பணத்துக்காகவும் அலைந்து திரியும் போலி தமிழ் தேசியவாதிகள்

  வெற்றிசெல்வன்       Thursday, 26 June 2025
செம்மணி போராட்டக் களத்திற்கு சென்ற மீன்பிடித்துறை அமைச்சரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் ரஜீவன் விரட்டப்பட்டுள்ளனர்...

காரணம் இன உணர்வாம்,படுகொலைக்கு காரணமானவர்களாம்

அப்படி என்றால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அதிகளவான வாக்குகளை செலுத்தியது யாழ்ப்பாண மக்கள்தான், அப்படி என்று சொன்னால் செம்மணியில் முதலில் விரட்டப்பட வேண்டியது தேசிய மக்கள் சக்திக்கு வாக்கு செலுத்திய தமிழர்களும்தான்
இன்று செம்மணியில் இருப்பவர்களில் அதிகமானோர் நீங்கள் கூறுவது போன்று படுகொலையை செய்தவர்களை ஆதரித்தவர்கள்தான்

அதனால்த்தான் ரஜூவன் எம்பியும் கூறுகிறார் செம்மணியில் மக்களோடு வேறு சிலரும் இருப்பதாக

இதுவரை நடைபெற்ற போராட்டங்களில் ஆளும்கட்சி உறுப்பினர்களோ அல்லது அமைச்சரோ பங்குபற்றியதாக நான் அறியவில்லை. அவ்வாறு இருக்க வந்தவர்களிடம் உங்கள் பிரச்சாரங்களை கூறாது அவர்களை தாக்கி விரட்டி உள்ளீர்கள்.

எனக்கு தெரியவில்லை உங்களுக்கான தீர்வை யார் பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறீர்கள் என்று...

அதிகளவான வாக்குகளை செலுத்தி மக்கள் தலைவர்கள் தீர்வை தருவார்கள் என்று வரவேற்றுத்தானே நீங்கள் சொல்வது போன்று படுகொலை செய்த கட்சிக்கு அதுவும் யாழில் அதிக வாக்குகளை செலுத்தி கொண்டாடினீர்கள் 
அப்போது செம்மணி நினைவு வரவில்லையா?

இன்று மட்டும் புதிதாக இன உணர்வு எப்படி வந்து இவர்களை விரட்டுகிறீர்கள்

உண்மையில் இதனை செய்தது தமிழ் அரசியல் கட்சி கைக்கூலிகள் என்பது அனைவருக்கும் தெரியும்...

ரஜீவன் எம்பி காணொளி ஒன்றை வெளியிட்டு மக்களுடன் வேறு சிலரும் கலந்திருப்பதாக கூறுகின்றார்..

மக்களின் உணர்வு போராட்டங்களை உணர்வாக நடத்துங்கள் உங்கள் கட்சிகளின் சண்டைகள் விரட்டல்களுக்காக இவ்வாறு கீழ்த்தரமாக செயற்பட்டு போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.

மற்றும் YouTube நடத்துநர்கள் நீங்கள் எங்கள் மக்களின் பிரச்சினையை உலகிற்கு எடுத்துக்காட்ட சென்றீர்களா அல்லது உங்கள் வியாபாரத்திற்காக சென்றீர்களா என்று தெரியவில்லை...

நீங்கள் வியாபாரம் செய்வதற்கு பல இடங்கள் இருக்கின்றன அதில் போய் செய்யுங்கள் உங்கள் வியாபாரத்தை அதைவிட்டுவிட்டு மக்கள் உணர்வு பூர்வமாக செய்யும் போரட்டத்தில் செய்யாதீர்கள்...

மனித உரிமைகள் ஆணையாளர் வரும்போது அங்கு பதிக்கப்பட்ட மக்களை கதைக்கவிடாது நீங்கள் உங்கள் தொலைபேசிகளை நீட்டிக்கொண்டு நிற்கிறீர்கள்... 

ஒருவாரவது சொல்லுங்கள் பார்ப்போம் நாங்கள் நடைபெற்ற பிரச்சினைகளை எங்கள் YouTube இல் தலைப்பாக போடவில்லை என்று...

இதுதான் உங்கள் வேலைய என்பதை ஊடகங்கள் சற்று சிந்தியுங்கள்...

செம்மணியில் உறங்குவது எமது உறவுகள் என்பதை மறந்துவிடாதீர்கள்...

நன்றி 🙏 

திருச்செல்வம் ஹிருஷன் 

#ThiruchchelvamKirushan #KiriPolitics

https://www.facebook.com/share/p/1BzBspXQRR/
logoblog

Thanks for reading தொடர்ந்து தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு பதவிக்காகவும் பணத்துக்காகவும் அலைந்து திரியும் போலி தமிழ் தேசியவாதிகள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment