இன்று தமிழ் தேசியம் , தமிழர் உரிமைகள், தமிழர் ஒற்றுமை என்று உணர்ச்சிகரமாக தமிழர்களை பாதுகாக்க வேண்டும் ஓடியாடி ஒற்றுமை என்று கூறி கூட்டணி சேர்ப்பவர்கள் எல்லாம் உண்மையில் நல்லவர்களா?
2009 க்கு முன்பு மாறி மாறி இந்திய படையுடனும் இலங்கை அரசாங்க படையுடனும் கூட்டு சேர்ந்து மாறி மாறி தமிழர்களை மட்டுமே கொலை செய்து பெண்களை பாலியல் ரீதியில் கொடுமை செய்து கொலை செய்தவர்கள், அதிகமானோர் இன்று வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு தமிழ் தலைவார்களாக வலம் வருகிறார்கள்.
சிங்கள படைகளிடம் பணம் வாங்கிக் கொண்டு கூலிப்படையாக தமிழர்களுக்காக எதிராக கடந்த காலத்தில் செயல்பட்டவர்கள் இன்று எப்படி தமிழர்களை காப்பாற்றுவார்கள்.
ஒரு செய்தி வாசித்தேன் தமிழர் சிக் கட்சியில் இருக்கும் ஒரு முன்னாள் விடுதலைப்புலி டக்ளஸ் தேவானந்தா epdp தமிழர்களை சிங்கள அரசுடன் சேர்ந்து கொலை செய்த இயக்கம் என்றும், அதனால் அவர்கள் ஆதரவை எதிர்க்கிறேன் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் பார்த்தேன்.
விடுதலைப் புலிகள் பிரேமதாசா அவர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களை கொலை செய்த வரலாறு மறந்து விட்டதா? எம்ஜிஆர் கேட்டுக்கொண்டபடி,,TELO இயக்கத்தை யும் அதன் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தையும் கொலை செய்த வரலாறு மறக்க முடியுமா அதனால எம்ஜிஆர் கொட்டிக் கொடுத்த பணம் உதவிகள் எவ்வளவு அதையும் மறக்க முடியுமா.
எல்லோரும் கொலை செய்து சித்திரவதை செய்து கொன்றது சொந்த தமிழ் மக்களை என்பது மறக்க கூடிய விடயமா?
இவர்களை விட இன்றைய சிங்கள NPP அரசு தமிழர்களுக்கு தேவையான அரசியல் உரிமைகள், தமிழ் கைதிகள் விடுதலை, மற்றும் இலங்கையில் தமிழர்களுக்கு தேவையான உண்மையான உரிமைகளை கொடுக்காத விட்டாலும், இவர்கள் தமிழருக்கு செய்த கொடுமைகள் தமிழ் இயக்கங்கள் தமிழருக்கு எதிராக செய்த கொடுமைகளை விட கூடவா.
2009 க்கு பின் சிங்கள அரசுகளோடு சேர்ந்து இயங்கிய இயக்கங்கள் தமிழர்களுக்கு என்ன உரிமைகளை அடிப்படை வளர்ச்சியை பெற்றுக் கொடுத்தனர். தங்கள் சொந்த வளர்ச்சிக்காக மட்டுமே சிங்கள அரசுகளோடு சேர்ந்து பணமும் பதவியும் பெற்றுக் கொண்ட வரலாறு தான் எல்லோருக்கும் தெரியும்.
புதிய நல்ல தலைவர்கள் உருவாகும் வரை இப்படியான பதிவுகள் போடத் தான் வேண்டி உள்ளது.
No comments:
Post a Comment