இந்தப் பகுதியில் இருக்கும் எனது அதிகமான பதிவுகள் இந்தியாவில் எனது அனுபவங்கள் என்பது கூட்டியோ குறைத்தோ எழுதப்பட்டதல்ல. நானும் உண்மைகளை தான் எழுதியுள்ளேன்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் என்னை எழுதக்கூடாது என்று மிரட்டியவர்கள் எல்லாம் பின்பு அமைதியாகிவிட்டார்கள்.
பல நண்பர்கள் முகநூலில் போட வேண்டாம் புத்தகமாக போடுங்கள் என்று கூறினார்கள். புத்தகமாக போட்டு உண்மைகளை விலை பேச நான் தயாராக இருக்கவில்லை. நான் எழுதியது பொய் என்றால் பிளாட் இயக்கம் மறுப்பு அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். இன்று வரை செய்யவில்லை. ஆனால் கடந்த பல வருடங்களாக எனக்கு பயமுறுத்தல்கள் மட்டும் விட்டார்கள்.
நான் இயக்கத்தில் வாழ்ந்ததற்கு அடையாளம் தலைவர்கள் எல்லாம் எப்படி எப்படி தமிழ் மக்களை ஏமாற்றி பதவி பணத்திற்காக திரிந்தார்கள் என்பதை ஒரு சிறு பகுதி ஏய் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டத்தான்.
எந்த மனிதனும் இந்த உயிரும் சாகா வரம் பெற்றவர்கள் அல்ல.
சுகமாக திரும்ப வந்தால் தொடரும் எனது பணி.
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
No comments:
Post a Comment