எனது உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில பதிவுகளின் கருத்துக்களை பார்த்த பின்பு அவை மிகவும் ஆபாசமாக கண்ணிய குறைவாக இருந்ததால் எனக்குத் தெரிந்த உண்மைகளை ஒரு பதிவாக இதில் போடுகிறேன். ஆபாசமாக கேவலமாக கருத்துக்களே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூறுவது போல் இருந்தாலும் உண்மையில் விடுதலைப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த மாவீரர்களுக்கு நீங்கள் உங்கள் எழுத்தால் செய்கையால் அசிங்கப்படுத்துகிறீர்கள் என்பதை ஒரு கனம் எண்ணிப் பாருங்கள். உயிர் தியாகம் செய்த எந்த ஒரு இயக்க போராளியும் தான் தனது மரணத்தின் பின் வரும் இளைஞர்கள் இப்படி ஆபாசமாக வக்கிரமாக பேசித் திரிவார்கள் என்று நினைத்திருந்தால் போராடவே வந்திருக்க மாட்டார்கள்.
அண்மையில் செம்மணி தமிழ் மனித படுகொலை பற்றிய ஆய்வில் பல எலும்புக்கூடுகள் வெளிவரத் தொடங்கின. இந்த செம்மணி படுகொலை என்பது கடந்த காலங்களில் சிங்கள அரசாங்கமும் சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய தமிழ் விடுதலை இயக்கங்களும் செய்த தமிழர்களின் படுகொலையை மறைக்க பயன்படுத்தப்பட்ட இடமாக சொல்லப்படுகிறது.
இந்தப் படுகொலை பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சகோதரி விடுதலைப்புலிகளின் துணுக்காய் சித்திரவதை கூடம் பற்றியும் அதில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்தது பற்றியும் அது பற்றியும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். உண்மை இருக்கலாம் ஆனால் செம்மொணி மனித படுகொலைகள் பற்றிய உண்மைகள் வெளிவரக் கூடாது என்று பழைய சிங்கள அரசியல்வாதிகளின் மற்றும் ராணுவத்தினரின் கடந்த கால தமிழர்களின் கொலைகள் அரசாங்கத்துடன் சேர்ந்துஇயங்கிய தமிழ் இயக்கங்கள் செய்த கொலைகள் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக முன்னுக்குப் பின் முரணாக அந்த சகோதரியின் பேட்டிகள் உள்ளன.
ஆயுதம் தூக்கிய அனைத்து தமிழ் இயக்கங்களும் தங்கள் தங்கள் சக்திக்கேற்ப சொந்த தமிழ் மக்களையும் இளைஞர்களையும் கொலை செய்து புதைத்த செய்திகள் எங்களுக்கு தெரியும். இதை ஆரம்பித்து வைத்தது சில தனிப்பட்ட திறமை, தலைமை பதவிக்கு போட்டி வந்து விடும் என்ற பயத்தில் பிரபாகரன் தான். தன்னோடு கூட இருந்த மைக்கேல் செட்டி பத்மநாபன் போன்ற திறமையானவர்களை இயக்கங்கள் வளர்வதற்கு முன்பே ஆரம்ப காலங்களில் கொலைகள் செய்தார். ஆனால் பிற்காலங்களில் பிரபாகரன் செய்த கொலைகளை துரோகிகளை கொன்றேன் என்று கூறினார் அவருடன் கூட இருந்தவர்களும் பயத்திலும் பதவிக்காகவும் கொன்றவர்களைப் பற்றி தெரியாமலே பிரபாகரன் சொல்வது போல் பிரபாகரன் செய்த கொல எல்லாம் துரோகிகளை தான் கொலை செய்தார் என்று தலையாட்டினார்கள். அதன்பின்பு விடுதலைப் புலிகள் இயக்கம் பெரிதாக வளர்ந்து விட்ட, தலைவருக்கும் இயக்கத்துக்கும் போட்டியாக வளரக்கூடிய தமிழ் இயக்கங்கள் தமிழ் தலைவர்கள் எல்லோரும் துரோகியலென்று கொலை செய்தார்கள். தமிழ் மக்களும் விடுதலை புலிகளை காட்டி வியாபாரங்கள் வசதி வாய்ப்புகளை பெற்ற வேறு நாட்டு தமிழர்களும் தமிழ் நாட்டு தமிழ் தலைவர்களும் விடுதலை புலிகள் இயக்கம் யாரை கொலை செய்தாலும் அவர்கள் சொல்லமுன்வே இவர்கள் சொல்லிவிடுவார்கள் துரோகிகளை கொன்று விட்டார்கள் என்று. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்த தமிழ் தலைவர்கள் சகோதர படுகொலையை நிறுத்தும்படியும் நல்ல ஆலோசனைகள் வழங்கியிருந்தால் 2009 முள்ளிவாய்க்கால் அவலம் நேர்ந்து இருக்காது.
எம்ஜிஆர் க்கும் கலைஞர் கருணாநிதிக்கும் குட்டிமணி விடயத்தில் ஏற்பட்ட பகிரங்க விவாதத்தில் குட்டிமணியின் மனைவியையும் அன்று ரெலோ இயக்கத் தலைவர்களாக இருந்த ராசு பிள்ளையும், ஸ்ரீ சபா ரத்னமும் உண்மையை தெளிவுபடக் கூறி கலைஞருக்கு ஆதரவாக நின்றதால் எம்ஜிஆர் telo இயக்கத்தின் மேல் கடும் கோபத்தில் இருந்தார்.1983,1984 ஆரம்ப காலங்களில் எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக இருந்தவர் பிளாட் செயல் அதிபர் உமா மகேஸ்வரன். எம்ஜிஆர், எம்ஜிஆரின் நெருங்கிய வழிகாட்டிஉளவுத்துறை தலைவர் டிஜிபி மோகனதாஸ் அவர்களும் உமா மகேஸ்வரன் அவர்களிடம் பலமுறை telo இயக்கத்தை வளர விடக்கூடாது என்றும் அவர்கள் வளர்ந்தால் உங்களுக்கு ஆபத்து என்றும் கூறி மூளை சலவை செய்யப் பார்த்திருக்கிறார்கள். அன்று இருந்த உமா மகேஸ்வரன் ஒரு பிடிவாத குணம் உள்ளவர் மற்றவர்கள் தன்னை பயன்படுத்துவதை விரும்பாதவர். ஒருமுறை எம்ஜிஆர் மோகனதாஸ் அவர்கள் நேரடியாக ஸ்ரீ சபாரத்தினத்தை கொலை செய்யும் படி யும் அதன் பிறகு பிளாட் இயக்கம் வளர்வதற்கு தான் உதவி செய்வதாகவும் கூறியுள்ளார். அன்று இருந்த உமா மகேஸ்வரன் எம்ஜிஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்றும் மோகனதாஸ் தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த போலீஸ் அதிகாரி என்றும் பார்க்காமல் நேரடியாகவே எங்கள் தமிழ் பிரச்சினைகளில் தமிழ் இயக்கங்களின் விடயங்களில் நீங்கள் தலையிடத் தேவையில்லை கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளார். அதோடு உமா மகேஸ்வரன் எம்.ஜி.ஆர் உறவு முறிந்தது. பின்பு தமிழ்நாட்டு காவல்துறை பல கஷ்டங்களை கொடுத்தது உண்மை.
அன்று இருந்த திறமையான சிறந்த தலைமை பண்புகளைக் கொண்டிருந்த பிளாட் செயல் அதிபர் உமா மகேஸ்வரன் எப்படி சிறிது காலத்தில் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தமிழர்களை கொல்வதற்காகவே பதவியில் இருந்தவர் லலித் அதுல முதலியின் நம்பிக்கை ஆன ஆளாக மாறி பிளாட் இயக்கத்தை நேரடி போராட்டத்தில் இருந்து விலகி பிளாட் இயக்கம் சிதறுண்டு போக காரணமாக இருந்தார் என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவும் கவலையாகவும் இருக்கிறது.
அன்று தமிழ்நாட்டில் நடந்த அரசியல் சம்பவங்களை பற்றி அறியாதவர்கள் மற்றவர்கள் பேசுவதையும் எழுதுவதையும் கேட்டு கலைஞர் கருணாநிதி அவர்களை துரோகி என்று இன்று கூட எழுதி வருகிறார்கள். கடைசி வரை பிரபாகரன் கலைஞரை திட்டியது கூட இல்லை என்பது தான் உண்மை. கலைஞரும் மற்ற தலைவர் மார்களும் எம் ஜி ஆர் ஐ தவிர இலங்கைத் தமிழர்களுக்கு அகில இந்திய ரீதியில் ஆதரவு பெற்றுக் கொடுப்பது தொடர்பாக teso என்று அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து மிகப் பிரபலமான இந்திய தலைவர்களை அழைத்து மதுரையில் மிகப் பிரமாண்டமாக ஒரு மகாநாட்டை நடத்திக் காட்டினார். இதன்மூலம் தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதியின் செல்வாக்கு வளர்வதை விரும்பாத எம்ஜிஆர் திட்டமிட்டு உளவுத்துறை தலைவர் மோகனதாஸ் மூலம் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை தனக்கு நெருக்கமாக அழைத்து வைத்துக் கொண்டு, அவர் மூலம் டெலோவை அழித்து ஸ்ரீ சபாரத்தினத்தையும் கொலை செய்தார். அதன் பின்பு விடுதலை புலிகளுக்கு அனைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு உதவிகளும் செய்தார். சகோதர சண்டையை , சகோதரபடுகொலையை நிறுத்தும்படி கலைஞர் கருணாநிதி மிகவும் மன்றாடினார். நடக்கவில்லை. அதோடு கலைஞர் கருணாநிதி இலங்கை தமிழர் போராட்டத்தில் பெரிய அளவு ஈடுபாடு காட்டவில்லை. ஒதுங்கி தனது தமிழ்நாட்டு அரசியலை மட்டும் கூடிய கவனம் செலுத்தினர். கலைஞர் கருணாநிதி இலங்கைத் தமிழர் போராட்டத்தில் இருந்து ஒதுங்கியது எம்ஜிஆர் இருக்கு மிக மிக மகிழ்ச்சியை கொடுத்த நேரம்.
பிரபாகரனுக்கு telo இயக்கம் மேல் கடும் கோபம் 1983 ஆண்டு உருவாக காரணம்.
1979 ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் இரண்டாக உடைந்து விட்ட நேரம் பிரபாகரன் போய் குட்டிமணி தங்கத்துரை அவர்களுடன் சேர்ந்துtelo இயக்கத்துடன் இயங்கத் தொடங்கினார். 1981நீர்வேலி வங்கி கொள்ளையின் போது கிடைத்த பெருமளவு பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க பிரபாகரன் இடம் ஒப்படைத்து விட்டு குட்டி மணியும் தங்கத்துரையும் அடுத்த நாள் அதிகாலை இந்தியா போவதற்கு பிரபாகரன் ஒரு ரகசிய இடத்தை கூறி தான் படகு கொண்டு வருவதாக கூறிச் சென்றார். ஒருவருக்கும் தெரியாமல் அந்த பிரபாகரன் கூறிய ரகசிய இடத்தில் காத்திருந்த குட்டிமணி தங்கத்துரைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. படகுடன் பிரபாகரன் வரவில்லை. ஆனால் துப்பாக்கிகளுடன் ஒரு பெரும் போலீஸ் படை வந்து இவர்களை கைது செய்தது. பின்பு நடந்தது எல்லோருக்கும் தெரியும். வெளிக்கடை சிறையில் வைத்து குட்டி மணியும் தங்கத்துரையும் தங்களை காட்டிக் கொடுத்தது பிரபாகரன் தான் என்று தங்களது வழக்கறிஞர்களிடம் கூறியிருக்கிறார்கள். இதை வழக்கறிஞர்கள் டெலோ தலைவர்களிடம் கூறியுள்ளார் கள். வழக்கறிஞர் கரிகாலன் பகிரங்கமாகவே சென்னையில் பல இடங்களில் கூறினார். சென்னையில் பிளாட் அலுவலகத்துக்கு வந்த போதும் எங்களுடன் கூறினார். பின்பு விடுதலைப்புலிகள் பயமுறுத்தப்பட்டு தற்போது கனடாவில் வசிக்கிரார். நீர்வேலி லட்சக்கணக்கான பணத்துடன் தனது இரண்டாவது போராட்டத்தை துவங்கிய பிரபாகரன் தனது முன்பிருந்த பழைய தோழர்களை தேடி குறிப்பாக ராகவன் என்ற சிவக்குமார் மற்றும் நாகராஜா அவர்களுடன் சேர்ந்து தமிழில விடுதலை புலிகள் இயக்கத்தை திரும்பவும் பெரிய அளவில் ஆரம்பித்தார். இவர்களுடன் சேர ஐயர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என ஐயர் எங்களிடம் கூறினார்.
1983 ஆண்டுகளில் நீர்வேலி பணத்தைக் கேட்டு டெலோ தலைவர்களுக்கும் பிரபாகரன் அவர்களுக்கும் பெரும் பிரச்சனையே நடந்ததாக கேள்வி. சென்னையின் சில இடங்களில் குட்டிமணி தங்கத்துரையை காட்டிக் கொடுத்தது பிரபாகரன் தான் என்று சில பல போஸ்டர் கள் ரெலோ இயக்கத்தால் ஒட்டப்பட்டது. பின்பு லட்சக்கணக்கான பணம் ரெலோ இயக்கத்துக்கும் பங்கு பிரிக்கப்பட்டு சமாதானம் ஏற்பட்டது தெரியும். இதுதான் பிரபாகரனுக்கும் ரெலோ இயக்கத்துக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய பகை. இதைத்தானே எம்ஜிஆர் பயன்படுத்திக் கொண்டார். இந்த சம்பவங்கள் பற்றிய விபரங்கள் நானே நேரடியாக அறிந்து கொண்டவை. யாரோ எழுதியதை படித்துவிட்டு கூறவில்லை.
அன்று இருந்த பிரபாகரன் உட்பட அனைத்து தலைவர்களிடமும் நெருங்கி பழக எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருந்தது. டெல்லியில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைக்கு நடக்கும் காலங்களில் எல்லோரும் ஒரே நட்சத்திர விடுதிகளில் தங்கி இருந்தோம். அப்பொழுது எல்லா தலைவர்களுடனும் எல்லோரும் மாறி மாறி இயக்கஅரசியலைத் தவிர மற்றதெல்லாம் பேசிக் கொள்வோம்.
பழையபடி தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து கொலை செய்வதை பார்ப்போம். ஆரம்ப காலத்தில் தனிப்பட்ட முறையில் தனது நண்பர்களையே கொலை செய்தது பிரபாகரன். ஆனால் மற்ற இயக்க தமிழ் தோழர்களை கடத்தி சித்திரவதை செய்து கொலை செய்வதை ஆரம்பித்து வைத்தது 1984 ஆண்டு கடைசியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம். பிளாட். சுழிபுரத்தில் வைத்து ஆறு விடுதலைப்புலி ஆதரவாளர்களை கொலை செய்தது மன்னிக்க முடியாத தவறு.
அதன் பிறகு தமிழ்நாட்டில் பயிற்சிக்காக வந்த தோழர்களை சந்தேகக் கண் கொண்டு பார்த்து கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட சொந்த இயக்கத் தோழர்களே கொலை செய்து பயிற்சி முகாம்களில் புதைத்தது பிளாட் இயக்கம்.
அதன் பிறகு மற்ற இயக்கங்களிலும் இதுபோல் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதை தெரிந்த அந்தந்த இயக்கத்தில் இருந்த நண்பர்கள் உண்மையை வெளிக்கொண்டு வந்தார் மக்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். விடுதலைப்புலிகள் இயக்கமும் தமிழ்நாட்டில் பிரபாகரன் திருமணம் விடியமாக முரண்பட்ட பலதோழர்களை சித்திரவதை செய்து கொலை செய்தது உண்மை. எல்லா இயக்கங்களிலும் தலைமையுடன் முரண்பட்ட கருத்தும் முரண்பட்ட பல தோழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட கொலை செய்யப்பட்டது உண்மை. இந்த தகுதியற்ற தலைவர் கள் தங்கள் தலைமை பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று முடிந்த அளவு நேர்மையான அடுத்த கட்ட இயக்க தலைமைகளை கொலை செய்தது தான் வரலாற்று உண்மையாகும்.
ஒரே தலைமை சர்வாதிகாரம் என்ற ஆசையில் விடுதலை புலிகள் அமைப்பு மற்ற இயக்கங்களை அழித்தது மட்டுமில்லாமல் அதிலிருந்து நல்ல தோழர்களை கூட கொலை செய்தது வரலாறு.1987 ஆண்டு ஆப்ரேஷன் லிப்ரேஷன் என்ற இலங்கை அரசின் ராணுவ தாக்குதலை சமாளிக்க இந்தியாவின் உதவியை ஆண்டன் பாலசிங்கம் டெல்லிக்கும் சென்னைக்கும் பறந்து பறந்து உதவி கேட்ட செய்தி எத்தனை பேருக்கு தெரியும். இந்தியாவில் போபோஸ் பீரங்கி ஊழலால் சரிந்து வந்த காங்கிரஸ் அரசின் செல்வாக்கை நிலை நிறுத்த அப்போது இந்திய அரசு இலங்கை பிரச்சனையை சரியான முறையில் திட்டமிடாமல் செயல்படுத்த முயன்றது தான் தவறான செயல் ஆகிவிட்டது. இந்தியாவை அவசரப்படுத்தி முடிவெடுக்க வைத்ததின் முக்கிய பங்கு விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்துக்கு மட்டுமே உரியது.
ஒப்பந்தத்தின் பின்பு விடுதலைப் புலிகள் இலங்கை ஜனாதிபதியுடன் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு நாங்கள் அண்ணன் தம்பிகள் என்று கூறிக்கொண்டு மற்ற இயக்கங்களை ஆதரவாளர்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்தார்கள். அதே நேரம் மற்ற இயக்கங்கள் விடுதலைப் புலிகளின் கடந்த கால செயல்களுக்கு பழிவாங்க இந்திய படைகளுடன் சேர்ந்து கொண்டு விடுதலை புலி இயக்க தோழர்களை கொன்றதை விட ஆதரவாளர்களையும் அவர்களின் குடும்பத்தார்களையும் கொலை செய்ததுதான் அதிகம். வவுனியாவில் டெலோ, பிளாட் இயக்கங்கள் செய்த சித்திரவதைகள் கொலைகள் எல்லாம் நூற்றுக்கணக்கில். எத்தனை எத்தனை பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்கள். ஈபிஆர்எல்எப் இயக்கத்தில் மக்களின் தலைகளை வெட்டி காட்சிக்கு வைத்து மண்டையன் குழு என்று பெயரெடுத்தவர்கள் எல்லாம் இன்று வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு தமிழர்களை காக்கும் அரசியல்வாதிகளாக வளம் வருகிறார் கள். சிந்தித்து ப் பார்க்கத் தெரியாத தவறுகளை தட்டி கேட்க தெரியாத இலங்கை தமிழ் மக்கள் குறிப்பாக வடபகுதி மக்கள் இன்றும் அன்றும் கொலைகாரர்களையே ஆதரித்து வருகிறது. டக்ளஸ் தேவானந்தா உட்பட பிரேம சந்திரன் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் எல்லோரும் தங்கள் பதவி பணத்துக்காக தமிழ் மக்களையே சித்திரவதை செய்து கொலை செய்தார்கள். ஆனாலும் இந்தியப் படைகள் வெளியேறிய பின்பு விடுதலைப் புலிகள் இயக்கம் பெருமளவு மற்ற இயக்க தோழர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் ஏன் சாதாரண மக்களை கூட பிடித்துக் கொண்டு போய் சித்திரவதை செய்து கொலை செய்தது எல்லோருக்கும் தெரியும். பணக்காரர்களையும். வியாபாரிகளையும் பணத்துக்காக பிடித்து சித்திரவதை செய்தது உண்மை. ஆனால் எல்லாவற்றையும் ஒரே வரியில் துரோகிகளை தான் இப்படி செய்தோம் என்று கூறுவார்கள் மந்தை கூட்டங்கள் ஆன தமிழ் மக்களும் ஆமாம் என்று இன்றுவரை தலையாட்டுகிறார்கள்.
ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர் பெற்றது என்று விடுதலை புலிகளை இன்றும் எல்லோரும் பாராட்டுவார்கள். அதை அவர்களின் இன்றுள்ள ஆதரவாளர்களும் பெருமையாக கூறிக் கொள்வார்கள். பெண்களை போற்றிய சுதந்திரம் கொடுத்த இயக்கம் விடுதலைப் புலிகள் அன்று இன்றும் அவர்கள் ஆதரவாளர்கள் பெருமையாக கூறிக் கொள்வார்கள். ஆனால் விடுதலைப் புலிகளைப் பற்றிய முரண்பட்ட கருத்துக்களை கூறுபவர்களைப் பற்றி முக நூல்களிலும் பொதுவெளியிலும் மிகவும் அசிங்கமாக வக்கிரத்தனமாக ஆபாசமாக வர்ணனை செய்து கருத்துக்களை போடுகிறார்கள். அது பெண்களாக இருந்தாலும் சரி. அன்று மாற்றுக் கருத்து காரர்களைஆயுதத்தால் அடக்கினார்கள். இன்று விடுதலைப்புலி இயக்கத்தை பிரபாகரனை போற்றி க் கொண்டிருக்கும்அவர்களது ஆதரவாளர்கள் மாற்றுக் கருத்தாளர்களை ஆபாசமாக கண்ணியக் குறைவான வார்த்தைகளால் பேசி எழுதி வருவது மாபெரும் விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகள் தலைவரும் உயிர் தியாகம் செய்த தோழர்களுக்கும் நீங்கள் செய்யும் நன்றி கடனா இது.
விமர்சனங்களை நல்ல முறையில் செய்யுங்கள் அப்பொழுதுதான் மறைந்த உண்மையான போராளிகளுக்கு உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்த கருணா மற்றும் புள்ளையான் போன்றவர்கள் ஒரு கட்டுக்கோப்பான ஒரு இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் போல் அவர்கள் செயல் இருக்கவில்லை. கர்ணா அம்மானின் பல படங்கள் ஆபாசமாக பெண்களுடன் மது பாட்டில்களுடன் வெளிவந்தன. ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தில் இருந்தவர்கள் இப்படியாகவா இருப்பார்கள்.
இவர்களைப் போன்றவர்களின் நடவடிக்கைகள் விடுதலைப்புலி இயக்கத்தை பற்றிய ஒழுக்கம் கட்டுப்பாடுகள் போன்றவற்றையே சந்தேகிக்க வைக்கிறது.
இந்தப் பதிவு சரியோ தவரோ தெரியாது ஆனால் எல்லா விடுதலை இயக்கங்களும் தங்கள் தங்கள் வசதிக்கேற்ப சித்திரவதை முகாம்களை வைத்து தமிழர்களை கொன்றது தான் சரித்திரம். அதில் தமிழக விடுதலை புலிகள் தங்கள் வசதிக்கேற்ப பெரிய பெரிய சித்திரவதை அமைத்து தமிழர்களை கொலை செய்தது உண்மை. ஆனால் விடுதலைப் புலிகளால் சித்திரவதை செய்த பட்டு கொல்லப்பட்ட தமிழர்களை ஒரே வரியில் துரோகியலென்று எந்த ஒரு அடிப்படை அறிவு இல்லாமல் வரலாறு தெரியாமல் இன்று விடுதலை புலிகளை ஆதரிப்போர் என்று ஒரு கூட்டம் விடுதலைப் புலிகள் கொலை செய்ததெல்லாம் துரோகியல் என்று கூறுவது வருந்தத்தக்கது.
முன்பு நான் போட்ட விடுதலைப்புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து அனுப்பியவர் பதிவுகளை திரும்பவும் போடுகிறேன்.
No comments:
Post a Comment