பகுதி 37
அடுத்த நாள் காலையில் நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் வை. கோபால்சாமி MP வீட்டுக்குப் போனோம். வை கோபால்சாமி எம்பி டெல்லிவரும் போது அடிக்கடி போய் நான்சந்தித்து பேசுவேன்.அதுபோல் செயலதிபர் உமா மகேஸ்வரனும் டெல்லிவரும்போது கோபால்சாமி எம்பி டெல்லியில்இருந்தால் போய் சந்திப்பர்.அவர் விடுதலைப் புலிகளோடு நெருக்கமாக இருந்தாலும் எங்களோடு நல்ல தொடர்பில் தான் இருந்தார்.
கோபாலசாமி எம் பி யும்,அவரது உதவியாளரும் எங்களுக்கு தேனீரும் பிரெட் டோஸ்ட் போட்டு கொடுத்து உபசரித்தார்கள். திம்பு பேச்சுவார்த்தை பற்றி, பேச்சுவார்த்தை வந்தபோது, உமாமகேஸ்வரன் செயலதிபர்ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரிபேச்சுவார்த்தை சம்பந்தமாக இலங்கைக்குப் போய் வரும் போது அவர் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அவருடன் நெருங்கிப் பழகி வைர நெக்லஸ் கள் விலை கூடிய நவரத்தினம் மாலைகள் போன்றவற்றை அன்பளிப்பா பெற்றுக்கொண்டதும் , மட்டுமல்லாமல் இந்திய,இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எதிராக வேலை செய்வதாகவும் போட்டுக் கொடுத்தார்.வை கோபால்சாமி மிகவும் கோபத்துடன் இவ்வளவெல்லாம் நடந்திருக்கிறதா நான் விடமாட்டேன் ஒரு கை பார்க்கிறேன் என்று கூறினார். அன்று ராஜ்யசபா பாராளுமன்றத்தில் வைகோஇந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரி இலங்கை ஜனாதிபதியின் கைக்கூலிவைர நெக்லஸ் க்காக விலை போய்விட்டார் காரசாரமாக பேசினார்.அடுத்த நாள் பத்திரிகைகளில் எல்லாம் ரொமேஷ் பண்டாரி வைர நெக்லஸ் வாங்கியதுதான் முக்கியத்துவம் பெற்றன.

85 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் லெபனான் பயிற்சிக்கு போக வந்த ஒரு தோழர் சங்கானை சேர்ந்தவர்என்னோடு ஒரே வகுப்பில் படித்த நெருங்கிய நண்பரின் தம்பி இவரும் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தான் படித்தவர். சின்ன மெண்டிசின் சமவயது நண்பர்கள் தான்.அவர்களின் விமான பயணத்துக்கு முதல் நாள் இரவு சென்னையில் இருந்து எனக்கு தொலைபேசி அந்த தோழரை அனுப்ப வேண்டாம். அவர் எங்கும் தப்பி போக விட வேண்டாம். இரண்டொரு நாளில் சென்னையிலிருந்து ஆள் வரும்அவருடன் அனுப்பி விடசொல்லி.அந்த சங்கானை தோழர் விசாரித்த போது தன்னை சந்ததியார் இன் ஆள்என்று முதலில் சந்தேகித்து விசாரித்தார்கள் என்றும், தன்னை சென்னைக்கு அனுப்ப வேண்டாம் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்றும் கூறினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நான் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம்இது பற்றிய விபரத்தை கூற அவர் தனக்கு தெரியாது தான் விசாரிக்கிறேன் என்றார் நானும் எனது நண்பரின் தம்பி எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும் தவறான ஆளாக இருக்காது என்று கூற, சரி டெல்லியில் கொஞ்சநாள் இருக்கட்டும் தான் கந்தசாமி இடம் பேசுவதாக கூறினார். நான் சென்னை அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு மாதவன் அண்ணாவிட கந்தசாமி வந்தால் உடன் என்னை தொடர்பு கொள்ள சொல்லச் சொன்னேன். கந்தசாமி தொடர்பு கொண்டபோது விபரத்தைக் கூறி, உதவி கேட்டேன் கந்தசாமிஅவன் கழகத்திற்குள் பிரச்சினை பண்ணாவிட்டால் சரி நீ புத்தி சொல்லி வை என்று கூறினார்.நான் கந்தசாமி மாறன் மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். கந்தசாமி சாகும்வரை நெருங்கிய நண்பனாக தான் இருந்தார். சங்கானை தோழர் திரும்ப சென்னை போய் இயக்கத்தில் வேலை செய்து இயக்கம் உடைந்தபோது வெளிநாட்டுக்கு போய் விட்டதாக அறிந்தேன் இப்போது அவர் நோர்வே நாட்டில் இருப்பதாக செய்தி.
லண்டனில் இருந்து மகர சிங்கம் என்ற பெரியவர் வந்திருந்தார். அவர் இலங்கை அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கியமாட்டிக்கொண்டு இந்திய பாராளுமன்றத்திற்கு அருகில் போய் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக கூறினார். ஒரு மாதிரி அவரை தடுத்து இந்திய நண்பர் சம்பத் அவர்கள் அவரைக் கூட்டிக்கொண்டு போய் கன்னாட் ப்ளேஸ் என்ற இடத்தில் நிற்க வைத்தார்.ஆர்ப்பாட்டம் செய்து விட்டு வந்த பெரியவர் மகர சிங்கமையா சென்னைக்குப் புறப்பட்டு, பின்பு தஞ்சாவூர் சென்றுஎமது முகாம் எல்லாம் பார்வையிட்டு திரும்ப லண்டன் போக டெல்லி வந்தபோது அவர் புளொட் கட்டாயம் தமிழீழம் பெற்றுத் தரும்என்ற நம்பிக்கை தனக்குவந்துள்ளதாக கூறினார்.

நாளை டில்லியில் எங்கள் தொடர்பில் இருந்த பத்திரிகையாளர்கள் வெளிநாட்டு தூதரகங்கள் பற்றிய விபரங்களை தருகிறேன்.
தொடரும்.....
No comments:
Post a Comment